This is a valid RSS feed.
This feed is valid, but interoperability with the widest range of feed readers could be improved by implementing the following recommendations.
<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
>
<channel>
<title>Wow தமிழா!</title>
<atom:link href="https://wowtam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
<link>https://wowtam.com/</link>
<description>குதூகலம் Unlimited</description>
<lastBuildDate>Fri, 26 Apr 2024 11:56:46 +0000</lastBuildDate>
<language>en-US</language>
<sy:updatePeriod>
hourly </sy:updatePeriod>
<sy:updateFrequency>
1 </sy:updateFrequency>
<generator>https://wordpress.org/?v=6.5.2</generator>
<image>
<url>https://wowtam.com/wp-content/uploads/2022/05/cropped-wowotam-logo3-32x32.jpg</url>
<title>Wow தமிழா!</title>
<link>https://wowtam.com/</link>
<width>32</width>
<height>32</height>
</image>
<item>
<title>பாஜகவுக்கு 180 சீட்தான்! திமுக சர்வே! – மிஸ் ரகசியா</title>
<link>https://wowtam.com/2-180-seats-for-bjp-dmk-survey-miss-sapya/25806/</link>
<comments>https://wowtam.com/2-180-seats-for-bjp-dmk-survey-miss-sapya/25806/#respond</comments>
<dc:creator><![CDATA[பி.எம். சுதிர்]]></dc:creator>
<pubDate>Fri, 26 Apr 2024 11:56:24 +0000</pubDate>
<category><![CDATA[Uncategorized]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25806</guid>
<description><![CDATA[<p>திமுகவினர் ரகசிய சர்வே எடுத்தாங்களாம் அதுல அண்ணாமலை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல தோப்பார்னு வந்திருக்கு. இதுல பாஜகவினருக்கு மகிழ்ச்சி.</p>
<p>The post <a href="https://wowtam.com/2-180-seats-for-bjp-dmk-survey-miss-sapya/25806/">பாஜகவுக்கு 180 சீட்தான்! திமுக சர்வே! – மிஸ் ரகசியா</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<p>“தேர்தல் முடிஞ்சு இன்னும் முடிவுகள் வெளியாகல. அதுக்குள்ள கூட்டணியில புகைச்சல் ஆரம்பிச்சுடுச்சு” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“எந்த கூட்டணியைப் பத்தி சொல்றே?”</mark></strong></p>
<p>“அதிமுக – தேமுதிக கூட்டணியைப் பத்திதான் சொல்றேன். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அதிமுக மேல ரொம்ப கோபமா இருக்காங்களாம். கூட்டணி பேச வந்தப்ப அதிமுக தலைவர்கள் சொன்னது ஒண்ணு. ஆனா கூட்டணி சேர்ந்த பிறகு அவங்க செஞ்சது ஒண்ணுன்னு கட்சிக்காரங்ககிட்ட அவங்க சொல்லிட்டு இருக்காங்க. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில அதிமுக கூட்டணி தலைவர்கள் கொடுத்த வாக்குறுதி என்னங்கிற ரகசியத்தை தேர்தல் முடிவுக்கு பிறகு பிரேமலதா வெளியிடலாம்னு சொல்றாங்க.”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“எடப்பாடி எப்படி இருக்கார்? கட்சி ஆலோசனைக் கூட்டத்துல ரொம்ப புலம்பியிருந்தாரே?”</mark></strong></p>
<p>“வட இந்தியாவுல பாஜக ஜெயிக்குமா ஆட்சிக்கு வருமானு டெல்லி நண்பர்கள்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்கார். நானுறு இடம்லாம் வராது. மெஜாரிட்டிக்கே கஷ்டப்படுவாங்கனு அவருக்கு சொல்லியிருக்காங்க. அதுல கொஞ்சம் சந்தோஷம் அவருக்கு. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தா தனக்கு கஷ்டம்னு நினைக்கிறார்.”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“பிரதமரோட வெறுப்பு பேச்சுக்கு அறிக்கை விட்டாரே?”</mark></strong></p>
<p>“அறிக்கை விடலாமா வேண்டாமானு ரொம்ப யோசிச்சாங்களாம். பாஜகவை ரொம்ப பகைச்சுக்க வேண்டாம், இங்கதான் எலெக்ஷன் முடிஞ்சிருச்சுல..சிறுபான்மையினர் வாக்குகள் போட்டுட்டாங்க..இனிம பாஜகவை எதிர்த்து அறிக்கை விடுறதுல ஒரு லாபமும் இல்லைனு சொல்லியிருக்காங்க. அமைதியா இருந்துருவோம்னு சொல்லியிருக்காங்க. ஒண்ணுமே சொல்லாம இருந்தா எதிர்காலத்துல பிரச்சினையாகும்னு எடப்பாடி சொன்னாராம். அதுனால பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“ஆமா அதுலதான் கண்டனம்கிற வார்த்தையே இல்லையே..”</mark></strong></p>
<p>“பிரதமருக்கு கண்டனம்னு சொன்னா இவரை ஒரு வழி பண்ணிடுவாங்கல”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">”திமுக – மதிமுக கூட்டணியிலயும் கொஞ்சம் விரிசல் இருந்துச்சே?”</mark></strong></p>
<p>“ஆமாம். தேர்தல் சின்னம் தொடர்பா துரை வையாபுரி சொன்ன சில கருத்துகளால ரெண்டு கட்சி தலைவர்கள் மனசுலயும் சில கசப்புகள் இருந்துச்சு. ஆனா இப்ப அது சரியானதா சொல்றாங்க. வாக்குப்பதிவு முடிஞ்ச பிறகு திமுக தலைவர் ஸ்டாலினை வைகோ சந்திச்சிருக்கார். அப்ப தன்னோட மகனுக்காக திமுக செஞ்ச பிரச்சாரத்துக்கு அவர் தனிப்பட்ட முறைல நன்றி சொல்லி இருக்கார். அதோட தன் மகன் பேசின பேச்சால யாருக்காவது மனவருத்தம் இருந்தா, தான் அதுக்காக மன்னிப்பு கேட்கறதா சொன்னாராம். இதே மாதிரி நேருகிட்டயும் வைகோ மனம்விட்டு பேசி இருக்காரு. அதனால இரு தரப்புலயும் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கு.”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லோரும் ஸ்டாலினை சந்திச்சிருக்காங்களே?”</mark></strong></p>
<p>“ஆமாம், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்ச்சியா திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கிறாங்க. அதுபடி காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்திச்சிருக்காங்க”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“முதல்வர் என்ன சொன்னாராம்?”</mark></strong></p>
<p>“முதல்வர் செம உற்சாகத்துல இருக்கிறாராம். வாங்க வின்னர்ஸ்னுதான் அவங்களை வரவேற்று இருக்கிறார். வடக்குலருந்து வர தகவல்கள் நல்லா இருக்கு. பிஜேபிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. அப்படிதான் ரிப்போர்ட்ஸ் எனக்கு கிடைக்குதுனு சொன்னாராம். அப்புறம் இதுல எத்தனை பேர் மந்திரியாகப் போறிங்கனு சிரிச்சுக்கிட்டே சொன்னாராம். அவர் கணக்குபடி பாஜகவுக்கு 180 சீட்தான் கிடைக்கும்னு சொல்லியிருக்கிறார்”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“நம்ப முடியலையே?”</mark></strong></p>
<p>“கூட போன காங்கிரஸ்காரர் சொன்ன தகவல் இது”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“அதை சொல்லல. நீ கொடுக்கிற தகவல்கள் நம்பிக்கைக்குரியதுனு தெரியும். 180 சீட்தான் பாஜகவுக்குன்றதை நம்ப முடியலைனு சொன்னேன்”</mark></strong></p>
<p>“ஆமாம். அப்படிதான் சொல்லியிருக்கிறார். பாஜகவின் பதற்றம் மோடி பேச்சுல தெரியுதுனும் சொன்னாராம்”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“வட மாநிலங்கள் பிரச்சாரத்துக்கு முதல்வர் போறதா தகவல் வந்தததே?”</mark></strong></p>
<p>‘முதல்வருக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கு. ஆனா சனாதன பிரச்சினைல திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சினு ஒரு பிம்பத்தை பாஜக உருவாக்கி வச்சிருக்கு. அதனால திமுக தலைவர்கள் வட மாநிலங்களுக்கு வந்தால் அது நெகடிவ்வா போய்டும்னு டெல்லி தலைவர் சொல்லியிருக்கிறார். அதனால முதல்வர் யோசிக்கிறாராம்”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“வட மாநில தேர்தல் நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு?”</mark></strong></p>
<p>“ஆரம்பத்துல பாஜகவோட கை ஓங்கி இருந்தாலும், இப்ப பல இடங்கள்ல காங்கிரஸ் கட்சியோட செல்வாக்கு அதிகரிச்சு வர்றதா பிரதமருக்கு உளவுத் துறை தகவல் சொல்லி இருக்குனு டெல்லில சொல்றாங்க. குறிப்பா மேற்கு உத்தர பிரதேசத்துல ரஜபுத்திர பிரிவினர் பாஜகவுக்கு எதிரா இருக்காங்க. இது தேர்தல் முடிவுகளை மாத்துமோன்னு பாஜக பயப்படுது. அதனாலதான் மோடியோட பிரச்சாரத்துல இப்ப காங்கிரஸ் கட்சியை அடி அடின்னு அடிச்சுட்டு இருக்கார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தா, இந்துக்களோட சொத்துகளை பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுப்பாங்கன்னு மோடி பேசுனதுகூட அதனாலதான்.”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“இது காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?”</mark></strong></p>
<p>“பாதிப்பைவிட இது அனுகூலமான விஷயத்தைத்தான் ஏற்படுத்தும்னு காங்கிரஸ் நினைக்குது. காங்கிரஸ் கட்சியை ஏற்கனவே ஆதரிச்சிக்கிட்டு இருக்கிற இந்துக்களோட ஓட்டை இது எந்த விதத்துலயும் பாதிக்காது. அதே நேரத்துல சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் கடந்த சில தேர்தல்களா பிரிஞ்சு கிடந்தது. ஆனா இப்ப மோடி காங்கிரஸ் மேல சொன்ன குற்றச்சாட்டால, நம்மளுக்கான கட்சி காங்கிரஸ்தாங்கிற எண்ணம் சிறுபான்மை இன மக்கள் மத்தியில அதிகரிச்சு இருக்கு. அதுவும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமா இருக்கும்னு பேசிக்கறாங்க.”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“கோவையில ஒரு லட்சம் வாக்குகளை காணோம்னு அண்ணாமலை புகார் சொல்லி இருக்காரே?”</mark></strong></p>
<p>“இது சார்பா பாஜக கோவையில நடத்தின ஆர்ப்பாட்டத்துல விரல்ல மை வச்சிருந்த பலர், தங்களுக்கு ஓட்டு போட வாய்ப்பு கிடைக்கலைன்னு சொல்லி போராடின காமெடிய நீங்க்கூட பார்த்திருப்பீங்களே.. இந்த விஷயத்துல அண்ணாமலை புகார் சொன்னாலும், அவருக்கு உதவியா வானதி சீனிவாசன் இன்னும் எந்த கருத்தையும் சொல்லாம இருக்காங்க. ’அவர் ஏதோ பரபரப்பா சொல்லணும்னு இப்படி சொல்லிட்டு இருக்காரு. நான் அதுக்கெல்லாம் துணைபோக முடியாது’ன்னு சொல்லிட்டாராம்.”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“அண்ணாமலை ஜெயிப்பாரா?”</mark></strong></p>
<p>“திமுகவினர் ஒரு ரகசிய சர்வே எடுத்தாங்களாம் அதுல அண்ணாமலை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல தோப்பார்னு வந்திருக்கு. இதுல பாஜகவினருக்கு மகிழ்ச்சி. திமுகவினருக்கு வருத்தம்”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color"> “திமுகவுக்கு ஏன் வருத்தம்?”</mark></strong></p>
<p>“நாடாளுமன்றத் தேர்தல்ல 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்கிறது ரொம்ப குறைவு. இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலயாவது ஜெயிப்போம்னு திமுக நம்பிக்கிட்டு இருந்தது. அதனால அதுக்கு வருத்தம். குறைந்த வாக்குகள் வித்தியாசத்துல தோத்தா பரவாயில்லைன்ற நிலைல பாஜகவினர் இருக்காங்க. இந்த நியூஸ் கேட்டு பாஜகவினருக்கு மகிழ்ச்சி”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">“அவங்களும் இப்படி சர்வே எடுத்திருப்பாங்கல?”</mark></strong></p>
<p>“ஆமாம். அதிலயும் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு இல்லனுதான் வந்திருக்குனு சொல்றாங்க. அதுனாலதான் ஒரு லட்சம் ஓட்டுக்களை காணோம்னு பாஜககவினர் சொல்லிக்கிட்டு இருக்காங்க”</p>
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">”அப்போ பாஜகவுல யார்தான் ஜெயிப்பாங்க?”</mark></strong></p>
<p><strong>“அதுக்குதான் இன்னும் பதில் கிடைக்கல” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.</strong></p>
<p></p>
<p>The post <a href="https://wowtam.com/2-180-seats-for-bjp-dmk-survey-miss-sapya/25806/">பாஜகவுக்கு 180 சீட்தான்! திமுக சர்வே! – மிஸ் ரகசியா</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/2-180-seats-for-bjp-dmk-survey-miss-sapya/25806/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>அக்கா பிரியங்காவை எதிர்க்க மாட்டேன் – வருண் காந்தி</title>
<link>https://wowtam.com/1-i-will-not-oppose-sister-priyanka-varun-gandhi/25804/</link>
<comments>https://wowtam.com/1-i-will-not-oppose-sister-priyanka-varun-gandhi/25804/#respond</comments>
<dc:creator><![CDATA[பி.எம். சுதிர்]]></dc:creator>
<pubDate>Fri, 26 Apr 2024 11:38:56 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் அரசியல்]]></category>
<category><![CDATA[அமேதி]]></category>
<category><![CDATA[உத்தர பிரதேசம்]]></category>
<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
<category><![CDATA[நாடாளுமன்ற தேர்தல்]]></category>
<category><![CDATA[பாஜக]]></category>
<category><![CDATA[பாரதிய ஜனதா கட்சி]]></category>
<category><![CDATA[பிரியங்கா]]></category>
<category><![CDATA[ரேபரேலி]]></category>
<category><![CDATA[வருண் காந்தி]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25804</guid>
<description><![CDATA[<p>குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும் அக்கா பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட வருண் காந்தி மறுத்திருக்கிறார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/1-i-will-not-oppose-sister-priyanka-varun-gandhi/25804/">அக்கா பிரியங்காவை எதிர்க்க மாட்டேன் – வருண் காந்தி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<p>நாடாளுமன்ற தேர்தலில் இப்போது காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கவனம் ரேபரேலி தொகுதி மீது திரும்பியிருக்கிறது. அங்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.</p>
<p>உத்தர பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்குள்ள மற்ற தொகுதிகள் கைவிட்டாலும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. . இதில் அமேதி தொகுதியை கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது. ஆனால் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அந்த வகையில் பார்த்தால் இப்போதைக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதி மட்டுமே காங்கிரஸ் கட்சியின் வசம் இருக்கிறது அந்த தொகுதியையும் எப்படியாவது கைப்பற்றி, உத்தர பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை மொத்தமாக அகற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறது பாஜக.</p>
<p>காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரேபரேலி தொகுதியில் இம்முறை பிரியங்கா காந்தி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பாஜக கருதுகிறது. அப்படி பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து எம்பியானால், அது அக்கட்சிக்கு சாதகமாகிவிடும் என்றும், நாடெங்கிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அது அளிக்கும் என்றும் பாஜக கருதுகிறது.</p>
<p>ராகுல் காந்தியை பப்பு என்று கிண்டலடித்து, அவரை ஒதுக்கித் தள்ள முயன்றது போல் போல் பிரியங்காவை அத்தனை எளிதாக ஒதுக்கித் தள்ள முடியாது என்று பாஜக தலைமை நினைக்கிறது. அதனால் பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு எதிராக வலுவாக ஒரு வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது. அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை நிறுத்தி, ராகுல் காந்தியை தோற்கடித்தது போல ரேபரேலியில் ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது.</p>
<p>அந்த வகையில் பிரியங்கா காந்தியை எதிர்த்து நிற்க பல பெயர்களை பாஜக பரிசீலித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதி, உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதாக், பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் தலைவர் வினய் கத்தியார், அரச குடும்பத்தைச் சேர்ந்த ராகேஷ் பிரதாப் சிங், சமஜ்வாதி கட்சியின் முன்னாள் கொறடாவான மனோஜ் பாண்டே என பல பெயர்களை இதற்காக பாஜக பரிசீலித்திருக்கிறது. இதற்காக தொகுதிக்குள் ஒரு ரகசிய சர்வேயையும் நடத்தியுள்ளது. அந்தக் கருத்துக் கேட்பில் பங்கேற்ற பலரும் தற்போது பாஜகவில் இருக்கும் வருண் காந்தியை பிரியங்காவுக்கு எதிராக நிறுத்தலாம் என்று கூறியிருக்கிறார்கள். இருவரும் இந்திரா காந்தியின் குடும்பம் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். பிரியங்கா காந்தியின் சித்தப்பா சஞ்சய் காந்தியின் மகன்தான் வருண் காந்தி. இவரும் இவரது அம்மாவும் பாஜகவில் இருக்கிறார்கள். இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து விலகியிருக்கிறார்கள். ராஜீவ் காந்திக்கும் அவரது குடும்பத்துக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை சஞ்சய் காந்தியின் குடும்பத்துக்கு இந்திரா கொடுக்கவில்லை என்ற வருத்தம் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகாவுக்கு உண்டு.</p>
<p>குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும் அக்கா பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட வருண் காந்தி மறுத்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பிலிபிட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார் வருண். இந்தத் தொகுதியில் இவர் அல்லது மேனகா காந்தி தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த முறை வருணுக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்ல. கடந்த சில மாதங்களாகவே வருணுக்கும் பாஜக தலைமைக்கும் முரண்கள் இருக்கின்றன.</p>
<p>இந்தப் பின்னணியில் அக்கா பிரியங்காவை எதிர்த்து போட்டியிட மறுத்திருக்கிறார் வருண் காந்தி. </p>
<p>இந்த தேர்தலில் ரேபரேலியில் போட்டியிட்டு ஜெயித்தாலும், தோற்றாலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே தான் எம்பியாக உள்ள பிலிபிட் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், இந்த வாய்ப்பை வருண் காந்தி ஏற்றுக்கொள்வார் என்று பாஜகவினர் நம்பியிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த்தற்கு நேர்மாறாக, இதை ஏற்க வருண் காந்தி மறுத்துள்ளார்.</p>
<p>எந்த நிலையிலும் இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்த்து போட்டியிடும் மனநிலையில் தான் இல்லை என்று அவர் கூறியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p>
<p>The post <a href="https://wowtam.com/1-i-will-not-oppose-sister-priyanka-varun-gandhi/25804/">அக்கா பிரியங்காவை எதிர்க்க மாட்டேன் – வருண் காந்தி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/1-i-will-not-oppose-sister-priyanka-varun-gandhi/25804/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>தோனி பணம் கேட்டா கொடுக்காதீங்க!</title>
<link>https://wowtam.com/5-dhoni-financial-help/25801/</link>
<comments>https://wowtam.com/5-dhoni-financial-help/25801/#respond</comments>
<dc:creator><![CDATA[பி.எம். சுதிர்]]></dc:creator>
<pubDate>Fri, 26 Apr 2024 11:04:48 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் விளையாட்டு]]></category>
<category><![CDATA[இன்ஸ்டாகிராம்]]></category>
<category><![CDATA[உதவி]]></category>
<category><![CDATA[எக்ஸ்]]></category>
<category><![CDATA[ஐபிஎல்]]></category>
<category><![CDATA[தோனி]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25801</guid>
<description><![CDATA[<p>தோனியின் சமூகவலைதள பக்கத்தில் இருந்து சமீபத்தில் வந்த ஒரு வேண்டுகோள் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.</p>
<p>The post <a href="https://wowtam.com/5-dhoni-financial-help/25801/">தோனி பணம் கேட்டா கொடுக்காதீங்க!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<p></p>
<p>தோனியின் சமூகவலைதள பக்கத்தில் இருந்து சமீபத்தில் வந்த ஒரு வேண்டுகோள் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. mahi77i2 என்ற ஹேண்டிலில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>தோனியின் படத்துடன் கூடிய அந்த ஹேண்டிலில், “ஹாய்… நான் தோனி. என் தனிப்பட்ட அக்கவுண்டில் இருந்து இந்த செய்தியை அனுப்புகிறேன். நான் இப்போது ராஞ்சி புறநகர் பகுதியில் இருக்கிறேன். நான் என்னுடைய பர்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன். எனக்கு 600 ரூபாயை போன்பே மூலம் அனுப்பினால் பஸ் பிடித்து வீட்டுக்கு போக உதவியாக இருக்கும். வீட்டுக்கு போனதும் பணத்தை திருப்பித் தந்துவிடுகிறேன்” என்று அவர் உதவி கேட்பதாய் அந்த பதிவு இருக்கிறது.</p>
<p>இன்ஸ்டா பக்கத்தில் வெளியான இந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் எக்ஸ் சமூக வலைதளங்களிலும் வெளியாகி இருக்கின்றன. எக்ஸ் வலைதளத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பதிவை பார்த்திருக்கிறார்கள். இதைப் பார்த்த சிலர் தோனிக்கு இப்படி ஒரு நிலையா என்று கவலைப்பட்டுள்ளனர்.</p>
<p>ஒரு சிலர் அவரைக் கிண்டலிடித்தும் கமெண்ட்களை அடித்துள்ளனர். அதில் ஒருவர் 2050-ம் ஆண்டுவரை ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதாக உறுதி அளித்தால் பணம் அனுப்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்., ஆனால் யாரும் பணம் அனுப்பினார்களா என்று தெரியவில்லை.</p>
<p>இந்த சூழலில் தோனியின் பெயரில் இருந்து பனம் கேட்டு பதிவுகள் வந்தால், அதை நம்பி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்றும், அது தோனியின் கணக்கு அல்ல… போலியான கணக்கு என்றும் தகவல் தொடர்புத் துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://wowtam.com/5-dhoni-financial-help/25801/">தோனி பணம் கேட்டா கொடுக்காதீங்க!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/5-dhoni-financial-help/25801/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>டல்லடிக்கும் நயன்தாரா மார்கெட்</title>
<link>https://wowtam.com/3-nayanthara-market-in-talladikum/25787/</link>
<comments>https://wowtam.com/3-nayanthara-market-in-talladikum/25787/#respond</comments>
<dc:creator><![CDATA[இரா. ரவிஷங்கர்]]></dc:creator>
<pubDate>Fri, 26 Apr 2024 10:14:23 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் சினிமா]]></category>
<category><![CDATA[Fahadh Faasil]]></category>
<category><![CDATA[Iravan]]></category>
<category><![CDATA[Jaawan]]></category>
<category><![CDATA[Lady Superstar]]></category>
<category><![CDATA[Malayalam Cinema]]></category>
<category><![CDATA[Nayanthara]]></category>
<category><![CDATA[Rowdy Films]]></category>
<category><![CDATA[Tamil Movies]]></category>
<category><![CDATA[ஃபஹத் ஃபாசில்]]></category>
<category><![CDATA[இறைவன்]]></category>
<category><![CDATA[ஜவான்]]></category>
<category><![CDATA[தமிழ்ப் படங்கள்]]></category>
<category><![CDATA[நயன்தாரா]]></category>
<category><![CDATA[மலையாள சினிமா]]></category>
<category><![CDATA[ரவுடி ஃப்லிம்ஸ்]]></category>
<category><![CDATA[லேடி சூப்பர் ஸ்டார்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25787</guid>
<description><![CDATA[<p>இதனால் வேறு வழியில்லாமல் சம்பளம் 2 கோடி இருந்தாலும் கூட பரவாயில்லை என்று மலையாள சினிமா பக்கம் ஒரு படம் பண்ண முடிவு செய்து இருக்கிறாராம்.</p>
<p>The post <a href="https://wowtam.com/3-nayanthara-market-in-talladikum/25787/">டல்லடிக்கும் நயன்தாரா மார்கெட்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-light-green-cyan-color">‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படும் நயன்தாராவுக்கே இது சோதனையாக காலம்தான் என்கிறார்கள்.</mark></strong></h1>
<p>’ஜவான்’ என்ற மிகப்பெரும் வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், நயன்தாராவுக்கு ஹிந்தியில் அடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை. மேலும் இவர் தனது சம்பளத்தை 12 கோடியாக உயர்த்திவிட்டார்.</p>
<p>சம்பள உயர்வு ஒரு பக்கம் என்றாலும், சமீபத்தில் இவர் நடித்தப் படங்கள் எதுவும் வெற்றிப்பெறவில்லை. கடைசியாக தமிழில் நடித்த ’இறைவன்’ படம் பெரும்தோல்வியைச் சந்தித்தது. ஹீரோயினை மையமாக கொண்ட படங்களில் நயன்தாரா நடிந்திருந்தாலும், அவையும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அந்த வகையில் ’அன்னப்பூரணி’ பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.</p>
<p>தமிழ்ப் படங்கள் அல்லது தெலுங்குப் படங்கள் என மாறி மாறி நடித்து கொண்டிருந்தவருக்கு இப்போது தெலுங்கிலும் வாய்ப்புகள் இல்லை. சீனியர் ஹீரோக்கள் இப்போது இளம் நடிகைகளை தங்களுக்கு ஜோடியாக போடும் படி பரிந்துரைப்பதால், நயனுக்கு சீனியர் ஹீரோக்களுடனும் நடிக்க வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டதாம்.</p>
<p>இப்போது தமிழில் கவினுக்கு ஜோடியாக நடிக்கலாமா அல்லது வேறெந்த ஜூனியர் நடிகர்களுடன் நடிக்கலாம் என்று யோசிக்குமளவிற்கு வாய்ப்புகள் குறைந்திருப்பதாக கூறுகிறார்கள்.</p>
<p>இதனால் வேறு வழியில்லாமல் சம்பளம் 2 கோடி இருந்தாலும் கூட பரவாயில்லை என்று மலையாள சினிமா பக்கம் ஒரு படம் பண்ண முடிவு செய்து இருக்கிறாராம்.</p>
<p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு செய்த, ‘டியர் ஸ்டூடன்ஸ்’ என்ற பட த்தில்தான் இப்போது நயன்தாரா நடித்து வருகிறார்.</p>
<h1 class="wp-block-heading"><strong>இப்படியே தொடர்ந்தால், தனது ரவுடி ஃப்லிம்ஸ் மூலம் தயாரிப்பாளராக சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கவும் நயன்தாரா யோசித்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.</strong></h1>
<hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#d41919" class="td_text_highlight_marker">மனம் வெறுத்து போன ஃபஹத் ஃபாசில்</span></strong></h1>
<p>கொரோனாவிற்குப் பிறகு இந்திய சினிமாவின் போக்கு தாறுமாறாக மாறியிருக்கிறது. கோவிட்டின் தாக்கத்தினால் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. அதே நேரம் புதியப்படங்களை ஒடிடி தளங்களில் பார்க்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது.</p>
<p>வீட்டில் இருந்தபடியே, நினைத்த நேரம், செளகரியமாக இருந்தபடியே புதிய படங்களை அவை வெளியான இரண்டு மாதங்களில் பார்க்க முடிவதால் இன்று ஒடிடி தளங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.</p>
<p>இதனால் ஒடிடி தளங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க, முன்னணி நட்சத்திரங்களின் படங்களை வாங்க போட்டிப்போடுகின்றன.</p>
<p>கோவிட்டின் போது தெலுங்குப் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 2023-ல் தமிழ்ப்படங்களுக்கு எதிர்பார்பு ஏற்பட்டது. 2024-ல் இப்போது மலையாளம் சினிமா இந்திய ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.</p>
<p>தமிழ், தெலுங்குப் படங்களுக்கு ஒடிடி தளங்கள் மத்தியில் கிடைத்த மவுசு, மலையாளப் படங்களுக்கு கிடைக்கவில்லை என்ற குறை இருக்கிறது. மலையாளப்படங்களை குறைந்த விலைக்கு வாங்கவே ஒடிடி தளங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.</p>
<p>ஒடிடி தளங்களின் இந்த பாரபட்சத்தை பற்றி ஃபஹத் ஃபாசில் வெளிப்படையாகவே மனம் திறந்து கருத்து கூறியிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆவேஷம்’ படம் நூறு கோடிகளைத் தாண்டி வசூல் செய்து வருகிறது. இந்நிலையில்தான் அவர், ‘மலையாள சினிமாவான மோலிவுட்டின் வியாபாரம் வளர்ச்சியடைந்து இருக்கிறது. ஆனால் மலையாள சினிமாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒரு உறுதியான் ஸ்ட்ரீமிங் பின்புலம் இல்லை. அதனால் நம்முடைய திறமையை திரையரங்குகளில்தான் காட்டியாக வேண்டும். திரையரங்குகளில் படம் ஓடிய பிறகே ஒடிடி தளங்கள் நம் படங்களின் உரிமையை வாங்க முன் வருகிறார்கள். ஆனால் இந்தியாவின் மற்ற மொழிகளில், படங்கள் எடுக்க ஆரம்பிக்கும் போது 80% ஒடிடி உரிமை வியாபாரம் ஆகிவிடுகிறது.</p>
<h1 class="wp-block-heading"><strong>இது மலையாள சினிமா மாடல் இல்லை. ஒரு படத்தை முழுமையாக எடுத்து முடிக்கவேண்டும். திரையரங்குகளில் வெளியிட்டு, அப்படங்களுக்குள்ள மதிப்பை உணர வைக்கவேண்டும். அப்படியானால்தான் ஒடிடி தளங்கள் நல்ல விலைக்கு வாங்க முன் வரும். இந்த அணுகுமுறைதான் நம்முடைய சினிமா கலாச்சாரத்தை மாற்றியமைத்து இருக்கிறது. நல்ல தரமான கதை, திரைக்கதை, படைப்பகளைக் கொடுக்கவேண்டுமென நம்முடைய கவனம் இருப்பதால்தான், நம்மால் நல்ல தரமான படைப்புகளை கொடுக்க முடிகிறது’ என்று மனம் திறந்து இருக்கிறார்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/3-nayanthara-market-in-talladikum/25787/">டல்லடிக்கும் நயன்தாரா மார்கெட்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/3-nayanthara-market-in-talladikum/25787/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – காட்டிக் கொடுத்த வைரல் வீடியோ</title>
<link>https://wowtam.com/4-son-arrested-for-brutally-beating-father-viral-video-of-betrayal/25798/</link>
<comments>https://wowtam.com/4-son-arrested-for-brutally-beating-father-viral-video-of-betrayal/25798/#respond</comments>
<dc:creator><![CDATA[தளவாய் சுந்தரம்]]></dc:creator>
<pubDate>Fri, 26 Apr 2024 10:13:43 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் க்ரைம்]]></category>
<category><![CDATA[அமிர்தா சேகோ]]></category>
<category><![CDATA[ஆத்தூர்]]></category>
<category><![CDATA[குழந்தை வேலு]]></category>
<category><![CDATA[சேலம்]]></category>
<category><![CDATA[தந்தையை தாக்கிய மகன்]]></category>
<category><![CDATA[பெரம்பலூர்]]></category>
<category><![CDATA[வைரல் வீடியோ]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25798</guid>
<description><![CDATA[<p>வீட்டில் திண்ணையில் குழந்தைவேலு அமர்ந்திருந்த போது, அங்கு வந்த சக்திவேல், தந்தையை முகத்தில் குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். </p>
<p>The post <a href="https://wowtam.com/4-son-arrested-for-brutally-beating-father-viral-video-of-betrayal/25798/">தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – காட்டிக் கொடுத்த வைரல் வீடியோ</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<p>சொத்து தகராறில் மகனே தந்தையை கொலைவெறியுடன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<h2 class="wp-block-heading"><strong>நடந்தது என்ன?</strong></h2>
<p>சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த குழந்தை வேலு என்பவர்தான் வைரல் வீடியோவில் மகனால் தாக்கப்பட்ட தந்தை. இவருக்கு ஹேமா என்கிற மனைவியும் சக்திவேல் என்கிற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் சக்திவேல் தான் தந்தையை கொடூரமாக தாக்கியவர்.</p>
<p>ஆத்தூரில் அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலையை குழந்தை வேலு நடத்தி வந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் மாடர்ன் ரைஸ்மில் ஒன்றும் இவருக்கு இருந்துள்ளது.</p>
<p>இதில் ஆத்தூரில் உள்ள சேகோ தொழிற்சாலையை கடந்த ஐந்து வருடங்களாக, சக்திவேல் தான் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் தொழில் ரீதியாக அதிக கடனை சக்திவேல் வாங்கியுள்ளார். மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலை ஏற்பட்டு, இந்த விஷயம் குழந்தை வேலுக்கு தெரியவரவே, மகனுக்கும் தந்தைக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.</p>
<p>கடன் பிரச்சினையில் இருந்த சக்திவேல் ஒரு கட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்த ரைஸ் மில்லையும் தன்வசம் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். ஆனால், அதில் குழந்தை வேலுவுக்கு 50 சதவிகித ஷேரும் குழந்தை வேலுவின் மாமனார் சுந்தரத்துக்கு 50 சதவிகித ஷேரும் இருந்துள்ளது. வங்கி கணக்குகள் முழுவதும் குழந்தைவேலுவின் பெயரில் இருந்ததால், சக்திவேலால் தான் நினைத்ததை செய்ய முடியவில்லை. இதனால், தந்தை மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.</p>
<p>இந்நிலையில், கடந்த 16.02.2024 அன்று பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு அமர்ந்திருந்த போது, அங்கு வந்த சக்திவேல், தந்தை குழந்தைவேலுவை இரண்டு கைகளால் முகத்தில் குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்துள்ளனர். ஆனால், அவர் கடைசி வரையிலும் மீண்டும் மீண்டும் வந்து குழந்தைவேலுவை கொலைவெறி நோக்கத்துடன் தாக்கியுள்ளார்.</p>
<p>இதில் பலத்த காயமடைந்த குழந்தைவேலு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி ஒருபக்கம் விசாரணை நடத்தி வந்துள்ளார். ஆனால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக, “சிகிச்சை முடிந்து வந்த குழந்தைவேலு தனக்கும் தன் மகனுக்கும் உள்ள பிரச்னையை தாங்களே பேசி முடித்துக்கொள்வதாக எழுதிக் கொடுத்தார்” என்று கூறப்படுகிறது.</p>
<p>ஆனால், சிகிச்சை முடிந்து வந்த இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.</p>
<h2 class="wp-block-heading"><strong>காட்டிக்கொடுத்த வைரல் வீடியோ</strong></h2>
<p>இந்நிலையில் குழந்தைவேலுவை 16.02.2024 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தந்தையை இப்படி கொடூரமாக தாக்கிய மகன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்த நிலையில், இப்போது கைகளத்தூர் காவல்துறையினர் சக்திவேலினை கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p>
<p>இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. சியாமளாதேவி, “ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமி என்பவர் சரியாக விசாரிக்காததால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும், இந்த வழக்கை மறு விசாரணை செய்யவும் மருத்துவ பரிசோதனையை மீண்டும் ஒருமுறை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.</p>
<p>தற்போது வெளிவந்த இந்த வீடியோ சம்பவத்தன்று கிடைத்திருந்தால் அப்போதே நடவடிக்கை எடுத்திருப்போம். சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த வீடியோ பரவ தொடங்கியதும் சக்திவேல் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/4-son-arrested-for-brutally-beating-father-viral-video-of-betrayal/25798/">தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – காட்டிக் கொடுத்த வைரல் வீடியோ</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/4-son-arrested-for-brutally-beating-father-viral-video-of-betrayal/25798/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>யார் இந்த Dhruv Rathee? – பாஜகவை பயங்காட்டும் வைரல் யூ டியூபர்</title>
<link>https://wowtam.com/3-who-is-this-dhruv-rathee-viral-youtuber/25789/</link>
<comments>https://wowtam.com/3-who-is-this-dhruv-rathee-viral-youtuber/25789/#respond</comments>
<dc:creator><![CDATA[தளவாய் சுந்தரம்]]></dc:creator>
<pubDate>Thu, 25 Apr 2024 11:45:12 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் அரசியல்]]></category>
<category><![CDATA[Dhruv Rathee]]></category>
<category><![CDATA[டியூபர்]]></category>
<category><![CDATA[துருவ் ராதே]]></category>
<category><![CDATA[நாடாளுமன்றத் தேர்தல்]]></category>
<category><![CDATA[பாஜக]]></category>
<category><![CDATA[பிரகாஷ் ராஜ்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25789</guid>
<description><![CDATA[<p>‘வாட்ஸ்அப் மாஃபியா' என்ற தலைப்பில் துருவ் ராதே வெளியிட்ட விடியோ 24 மணி நேரத்துக்குள் 1 கோடியே 21 லட்சம் பார்வைகளை எட்டியுள்ளது!</p>
<p>The post <a href="https://wowtam.com/3-who-is-this-dhruv-rathee-viral-youtuber/25789/">யார் இந்த Dhruv Rathee? – பாஜகவை பயங்காட்டும் வைரல் யூ டியூபர்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<p>இந்த நாடாளுமன்றத் தேர்தலில் களத்திற்கே வராமலும் இந்தியா முழுவதும் அதிகம் பேசப்படுபவர்கள் இருவர். ஒருவர் நம் பிரகாஷ் ராஜ்; இன்னொருவர் இந்தி யூ டியூபர் துருவ் ராதே. பிரகாஷ் ராஜை போலவே பாஜகவை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார் துருவ் ராதே. ‘வாட்ஸ்அப் மாஃபியா – மில்லியன் கணக்கான இந்தியர்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர்?’ என்ற தலைப்பில் பாஜகவினர் பற்றி துருவ் ராதே கடைசியாக நேற்று வெளியிட்ட விடியோ, 24 மணி நேரத்துக்குள் 1 கோடியே 21 லட்சம் பார்வைகளை எட்டியுள்ளது!</p>
<h2 class="wp-block-heading"><strong>யார் இந்த துருவ் ராதே?</strong></h2>
<p>இன்று உலகளவில் அறிமுகமான மிகச் சில யூடியூபர், விளாக்கர், சமூக ஊடக ஆர்வலர்களில் துருவ் ராதேவும் ஒருவர். குறிப்பாக சமூக அரசியல், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த யூ டியூப் வீடியோக்களுக்காக மிகப் பிரபலாக அறியப்படுகிறார், துருவ் ராதே.</p>
<p>இன்றைய (25-4-24) நிலவரப்படி, துருவ் ராதே சேனலை ஒரு கோடியே 84 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்; இதுவரை 258 கோடியே 94 லட்சம் பேர் அவரது வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள்.</p>
<p>துருவ் ராதேவை இன்ஸ்டாக்ராமில் 68 லட்சம் பேரும் ஃபேஸ்புக்கில் 28 லட்சம் பேரும் வாட்ஸ் அப் சேனலில் 16 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள்.</p>
<p>யூடியூபர், விளாக்கர், சமூக ஊடக ஆர்வலர் என்பதுடன் இணையதள டெவலப்பர், டிசைனர், காப்பிரைட்டர், ப்ராஜெக்ட் டீம் லீடர், டேட்டா அனலிஸ்ட், இ-காமர்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆலோசகர் என பன்முகம் கொண்ட துருவ் ராதேவுக்கு 29 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<h2 class="wp-block-heading"><strong>துருவ் ராதே குடும்பமும் கல்வியும்</strong></h2>
<p>இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்கில் 1994 அக்டோபர் 8 அன்று பிறந்தார் துருவ் ராதே. நடுத்தர குடும்பம்தான். தொழிலதிபர் தந்தையும் ஆசிரியையான தாயும் பணிகள் காரணமாக டில்லியில் வசித்தார்கள். எனவே, ராதேவும் டில்லியில்தான் வளர்ந்தார்; அவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.</p>
<p>ராதே, பள்ளிக் கல்வியை டெல்லி பப்ளிக் பள்ளியிலும் ஆர்.கே. உயர்நிலைப் பள்ளியிலும் முடித்த பிறகு, 2013-2015 காலகட்டத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து 2015-2017இல் ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.</p>
<p>ராதேயின் இந்த வலுவான அடித்தளம் கொண்ட கல்விப் பின்னணியே அவரை ஒரு வெற்றிகரமான யூடியூபராகவும் கல்வியாளராகவும் ஆக்கியிருக்கிறது. ராதேயின் கல்விப் பின்னணி அவருக்கு பொருளாதாரம், அரசியல், பொறியியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் வலுவான அடித்தளத்தை அளித்துள்ளது. இந்த அடித்தளம்தான் அவருக்கு பல்வேறு தலைப்புகளில் தகவல் மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்களை உருவாக்க உதவியுள்ளது.</p>
<p>மேலும், கற்பது என்பதை கல்லூரியோடு முடிந்த ஒன்றாக ராதே கருதுவதில்லை. வாழ்நாள் முழுவதும் கற்பவர்களிலும் ராதேவும் ஒருவர். தனது அறிவையும் திறமையையும் மேம்படுத்த, “இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதிய வழிகளையும் தேடு”வதாக சொல்கிறார், ராதே.</p>
<p>இதனுடன், அவரின் அடர் பழுப்பு நிற முடி, பழுப்பு நிற கண்கள், உயரமான – ஒல்லியான உடல் (183 செ.மீ. (6 அடி) உயரம், 165 பவுண்ட் (75 கிலோ) எடை), நட்பான – யாரும் அணுக தயங்காத முக அமைப்பு, அடிக்கடி புன்னகைப்பது, ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்கள் போன்ற சாதாரண ஆடைகளையே அதிகம் அணிவது (எப்போதாவதுதான் சூட் அல்லது சட்டையுடன் தோன்றுகிறார்) இவை எல்லாம் சேர்ந்துதான் ராதே வெற்றிகரமான யூ டியூபராக உதவியிருக்கிறது என்று சொல்லலாம்.</p>
<p>ராதேயின் குடும்பமும் ஆரம்பத்திலிருந்தே அவரது யூடியூப் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அவரது பெற்றோர்கள் அவரது கல்வியைத் தொடர ஊக்கப்படுத்தியது போல் கனவுகளைப் பின்பற்றவும் ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். ராதேயின் சகோதரரும் ஒரு யூடியூபர். அவரும் ராதேயின் பல வீடியோக்களில் ஒத்துழைத்துள்ளார்.</p>
<p>ராதே, தனது குடும்பத்தைப் பற்றி அதிக தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வதில்லை. இருப்பினும், தனது குடும்பம் தனக்கு மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் தனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவில் பேசும்போது, “எனது குடும்பமே எனக்கு மிகப்பெரிய உத்வேகம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, இரக்கத்தின் முக்கியத்துவத்தை எனக்கு எனது பெற்றோர்கள் தான் கற்பித்தனர். அவர்கள் வழங்கிய ஆதரவிற்காக எனது வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன்” என்கிறார், ராதே.</p>
<h2 class="wp-block-heading"><strong>காதல் திருமணம்</strong></h2>
<p>ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள பெல்வெடெரே அரண்மனையில் நவம்பர் 2021இல், தனது நீண்டகால காதலியான ஜூலி எல்பிரை மணந்தார், துருவ் ராதே. ஜூலி ஒரு ஜெர்மன் குடிமகள். ஜூலியை ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படிக்கும் போதுதான் முதன்முதலில் சந்தித்தார் ராதே. 2018இல் டேட்டிங் செய்து 2020இல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.</p>
<p>தனது குடும்ப வாழ்க்கை பற்றி ராதே ஒரு நேர்காணலில், “திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. ஆனால், ஜூலியுடன் எனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க உற்சாகமாக இருந்தேன். இருவரும் குடும்பத்தை சிக்கலின்றி, சிறப்பாக நடத்த உறுதி பூண்டுள்ளோம். ஜூலி எனக்கு மிகப்பெரிய ஆதரவாளர். அவளை எனது வாழ்க்கையில் பெற்ற வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” என்று கூறியுள்ளார்.</p>
<p>ராதேவும் ஜூலியும் தற்போது ஜெர்மனியின் பெர்லினில் வசிக்கின்றனர்.</p>
<h2 class="wp-block-heading"><strong>யூ டியூப்பர் அவதாரம்</strong></h2>
<p>2013 ஜனவரி 8இல் ‘துருவ் ராதே’ என்று தனது பெயரிலேயே யூ டியூப் சேனலை தொடங்கினார் துருவ். முதலில் தனது பயண வீடியோ ஒன்றை பதிவேற்றினார். அடுத்தும் ஒரு பயண வீடியோ. முதல் மூன்று வருடங்களில் இந்த இரண்டு வீடியோகளை மட்டுமே வெளியிட்டார்.</p>
<p>பின்னர் 2016 செப்டம்பரில் ‘BJP IT Cell Exposed: How lies and propaganda are spread’ என்ற வீடியோவில் இருந்து அரசியல் மற்றும் சமூக தலைப்புகளுக்கு மாறத் தொடங்கினார். குறிப்பாக உண்மைச் சரிபார்ப்பு (Fact Check), விளக்கமளித்தல் (Explanation) வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டார். 2022 முஹம்மது கருத்து சர்ச்சை, 2022 மோர்பி பாலம் சரிவு, 2019 புல்வாமா தாக்குதல், 2023 இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம், 2023 மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ராதே தனது வீடியோக்களில் உரையாற்றியுள்ளார்.</p>
<p>இந்த வீடியோக்கள் வெளியிடுவதன் நோக்கம் குறித்த கேள்விக்கு ஒரு நேர்காணலில், “இந்தியாவில் உள்ளவர்களுக்கு இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சியளிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் யூடியூப், வாட்ஸ்அப்பில் எதைப் பார்த்தாலும் கண்மூடித்தனமாக நம்புகின்றனர்” என்று கூறுகிறார், ராதே.</p>
<p>Dhruv Rathee சேனலில் இதுவரை 612 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வீடியோகளை இதுவரை 258 கோடியே 94 லட்சத்து 19 ஆயிரம் பேர் பார்த்துள்ளார்கள். அதிகபட்சமாக ‘Arvind Kejriwal Jailed! | DICTATORSHIP Confirmed?’ என்ற துருவ் வீடியோவை 3 கோடியே 2 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.</p>
<p>அரசியல் குறித்து தீவிரமான உரையாடல்களுக்கு இடையே, ‘ராதே பீ நியூஸ்’ என்ற நையாண்டியான ‘போலி செய்தி’ பிரிவையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘யூ டியூப்பை அரசியல் தளமாகப் பயன்படுத்திய முதல் இந்திய பயனர்களில் ராதேயும் ஒருவர்’ என்கிறது ‘ThePrint”.</p>
<p>இதனிடையே 2017 முதல் 2020ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, The Print இணைய தளத்தில் சில கருத்துக் கட்டுரைகளையும் எழுதினார்.</p>
<p>ஜூலை 2020இல், ‘ராதே துருவ் ராதே வ்லாக்ஸ்’ என்ற மற்றொரு யூடியூப் சேனலைத் தொடங்கினார். இதில் தனது சர்வதேச பயண பதிவுகளைப் பகிர்ந்துகொண்டார். இந்த சேனலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதை 25 லட்சம் பின் தொடர்கிறார்கள். 214 வீடியோக்கள் பதிவேற்றியுள்ளார். இவற்றை இதுவரை 41 கோடியே 69 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். இதில் துருவ் – ஜூலி திருமண வீடியோவை மட்டும் ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளார்கள்.</p>
<p>Spotifyஇல் ‘மஹா பாரத்’ எனப்படும் ஒரு போட்காஸ்டையும் துருவ் தொகுத்து வழங்குகிறார்.</p>
<p>தனது வீடியோக்கள் வெற்றிக்கு காரணமாக, “முடிந்தவரை எளிமையாக விஷயங்களை முன்வைப்பது, சிக்கல்களை எளிய வார்த்தைகளில் உடைப்பதுதான். எளிமையாக ஒரு காரியத்தைச் செய்வது மக்கள் கவனத்தை ஈர்க்கும் என்பதை பார்த்து நானும் ஆச்சரியப்படுகிறேன்” என்கிறார் ராதே.</p>
<p>தனது வீடியோக்களில் இந்திய அரசியல், கட்டுக்கதைகள், மதம், பொழுதுபோக்கு என பல்வேறு தலைப்புகளில் அச்சமின்றி ஆராய்வதற்காகவே துருவ் ராதே இன்று உலகளவில் அதிகமும் அறியப்படுகிறார். தேர்தல் பத்திரத்தை எதனால் மிகப்பெரிய ஊழல் என்று சொல்கிறாகள் என்பது குறித்து புரியும்படி விரிவாக ராதே அலசிய வீடியோ வெளியான 4ஆவது நாளில் 1.28 கோடி பார்வைகளை தாண்டியது. கடைசியாக நேற்று (23-4-24) வெளியிட்ட, ‘How Millions of Indians were BRAINWASHED? | The WhatsApp Mafia’ வீடியோ ஒரே நாளில் ஒரு கோடியே 21 லட்சம் பார்வைகளை கடந்து அந்த சாதனையை முறியடித்தது.</p>
<p>இவ்வளவு ஆதரவு இருந்தால் எதிர்ப்பும் இருக்கும்தானே…</p>
<p>2020ஆம் ஆண்டில், கங்கனா ரணாவத்தின் அறிக்கைகளை விமர்சித்து விவாதிக்கும் வீடியோவை ராதே வெளியிட்டார். பதிலுக்கு ரணாவத், ராதேக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது குறிப்பிடத்தக்கது.</p>
<p>2022 செப்டம்பரில் பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி குறித்து ராதே வெளியிட்ட வீடியோவை இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முடக்கியது. அதில், இந்தியாவின் சிதைந்த வரைபடம் இருப்பதாகவும், அதில் காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தானின் பகுதியாக அல்லது ‘சர்ச்சைக்குரியதாக’ சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு கூறியது.</p>
<p>சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் இரண்டாவது சீசனில், வைல்ட் கார்டு போட்டியாளராக ராதே பங்கேற்பதாக வதந்திகள் பரப்பப்பட்டது. அந்த தகவலை மறுத்த ராதே, “கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும், என் வாழ்நாளில் பிக்பாஸ் போன்ற முட்டாள்தனமான நிகழ்ச்சிக்கு செல்லமாட்டேன் என்பதை தெளிவாகச் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சி சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது ” என்று விளக்கமளித்தார்.</p>
<p>தொடர்ந்து, துருவ் ராதே மனைவி ஜூலிக்கு பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் அனுப்பப்பட்டது.</p>
<p>ஆபத்துகள் இருந்தபோதிலும் ராதே கலங்காமல் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.</p>
<h2 class="wp-block-heading"><strong>தமிழில் துருவ் ராதே</strong></h2>
<p>துருவ் ராதேவின் அரசியல் வீடியோக்கள் இந்தி மொழி கடந்தும் வரவேற்பு பெறத் தொடங்கியதை உணர்ந்து தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, கன்னடம் ஆகிய ஐந்து இந்திய பிராந்திய மொழிகளில் தனது டப்பிங் வீடியோக்களை வெளியிடுவதற்கான ஐந்து புதிய யூ டியூப் சேனல்களை ஏப்ரல் 18, 2024 அன்று ராதே தொடங்கியுள்ளார்.</p>
<p>தமிழில் ‘ஜெயிலில் அரவிந்த் கெஜ்ரிவால்! சர்வாதிகாரம் உறுதி செய்யப்பட்டதா?’ என்ற தலைப்பில் துருவ் வெளியிட்ட முதல் வீடியோ 6 நாட்களில் 6 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.</p>
<p>ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியுமான பாலசுப்பிரமணியம் முத்துசாமி, “இச்சிறுவன் எனது முதல் குழந்தையை விட இளையவன் என்பதே என்னை வியக்க வைக்கும் முதல் செய்தி. இந்தியாவில் 2024க்குப் பிறகு மக்களாட்சி நிலைத்து நிற்கும் என்றால், அதற்கு முக்கியக் காரணங்களில் துருவ் ராதேவும் ஒன்று என உறுதியாகச் சொல்வேன்” என்கிறார்.</p>
<p>‘டைம்’ இதழ் 2023இல் வெளியிட்ட அடுத்த தலைமுறை தலைவர்களின் பட்டியலில் துருவ் ராதேவும் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://wowtam.com/3-who-is-this-dhruv-rathee-viral-youtuber/25789/">யார் இந்த Dhruv Rathee? – பாஜகவை பயங்காட்டும் வைரல் யூ டியூபர்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/3-who-is-this-dhruv-rathee-viral-youtuber/25789/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>வைரமுத்து கொடுக்கும் அட்வைஸ் இளையராஜாவுக்கா?</title>
<link>https://wowtam.com/5-is-vairamuthus-advice-for-ilayaraja/25783/</link>
<comments>https://wowtam.com/5-is-vairamuthus-advice-for-ilayaraja/25783/#respond</comments>
<dc:creator><![CDATA[பி.எம். சுதிர்]]></dc:creator>
<pubDate>Thu, 25 Apr 2024 11:03:38 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் சினிமா]]></category>
<category><![CDATA[Echo Company]]></category>
<category><![CDATA[Forehead Fire]]></category>
<category><![CDATA[High Court]]></category>
<category><![CDATA[Inquiry]]></category>
<category><![CDATA[Judges]]></category>
<category><![CDATA[Laiyaraja]]></category>
<category><![CDATA[music]]></category>
<category><![CDATA[Songs]]></category>
<category><![CDATA[Vairamuthu]]></category>
<category><![CDATA[இசை]]></category>
<category><![CDATA[இளையராஜா]]></category>
<category><![CDATA[உயர் நீதிமன்றம்]]></category>
<category><![CDATA[எக்கோ நிறுவனம்]]></category>
<category><![CDATA[நீதிபதிகள்]]></category>
<category><![CDATA[நெற்றித் தீ]]></category>
<category><![CDATA[பாடல்கள்]]></category>
<category><![CDATA[விசாரணை]]></category>
<category><![CDATA[வைரமுத்து]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25783</guid>
<description><![CDATA[<p>இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி கவிஞர் வைரமுத்து மறைமுகமாக ஒரு கவிதையை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். </p>
<p>The post <a href="https://wowtam.com/5-is-vairamuthus-advice-for-ilayaraja/25783/">வைரமுத்து கொடுக்கும் அட்வைஸ் இளையராஜாவுக்கா?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி கவிஞர் வைரமுத்து மறைமுகமாக ஒரு கவிதையை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ” சுயமென்று ஏதுமில்லை; எல்லாம் கூட்டியக்கம் பிறக்கும் பிள்ளை ஆணோ பெண்ணோ பெறுவது மட்டும் ஆணும் பெண்ணும்” என்று அந்த கவிதையில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.</mark></strong></h1>
<p>ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் எக்கோ நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இசையமைப்பாளர் இளையராஜா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது விசாரணையின் போது ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர் மட்டுமே உருவாக்குவது அல்ல, அது பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல்வேறு தரப்பினரும் இணைந்து உருவாக்கும் ஒன்று. பாடல் வரிகள் இல்லாமல் எப்படி பாடல் உருவாக முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.</p>
<p>இந்த சூழலில் இளையராஜாவின் இசையில் பல பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து, இன்று ‘நெற்றித் தீ’ எனும் தலைப்பில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கவிதையை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை…</p>
<h1 class="wp-block-heading">மனிதா!<br>நீ எழுப்பும் இசை<br>உடலால் விளைவதா?<br>உயிரால் விளைவதா?</h1>
<h1 class="wp-block-heading">உடலால் எனில்<br>உயிரை விட்டுவிடப்போமோ?<br>உயிரால் எனில்<br>உடலைச் சுட்டுவிடப்போமோ?</h1>
<h1 class="wp-block-heading">உயிர் உந்தி எழாமல்<br>உடல் சிந்திவிடாமல்<br>இசையேது இசை?<br>மொழியேது மொழி?</h1>
<h1 class="wp-block-heading">சுயமென்று ஏதுமில்லை;<br>எல்லாம் கூட்டியக்கம்<br>பிறக்கும் பிள்ளை ஆணோ பெண்ணோ<br>பெறுவது மட்டும் ஆணும் பெண்ணும்</h1>
<p><br>-இவ்வாறு அந்த கவிதையில் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>வைரமுத்து இந்த கவிதையை வெளியிட்டதும், அது தொடர்பான விவாதம் எக்ஸ் பக்கத்தில் எழுந்திருக்கிறது. இளையராஜாவைதான் வைரமுத்து சொல்கிறார் என்று பலர் பதிவுகள் இடுகிறார்கள்.</p>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#cf2e2e" class="td_text_highlight_marker">மனோராஜு:</span></strong></h1>
<p>அண்ணன் கவிப்பேரரசு அவர்களின் கூற்று உண்மை.எந்தவொரு பணியும் தனியாக இல்லை கூட்டியக்கம் தான் அதிலும் திரைத்துறையில் நடிகர் நடிகை இயக்குநர் தொழில்நுட்பக் கலைஞர் எனப் பலர். பாடலை எடுத்துக் கொண்டால் இசையமைப்பாளர் மட்டும் உரிமை கொண்டாட முடியுமா பாடலாசிரியர் பாடகர் சேர்ந்தால் தான் வெற்றி.</p>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#cf2e2e" class="td_text_highlight_marker">சகா:</span></strong></h1>
<p>பாடலாசிரியர் எழுத்துக்கு உரிமை கோரினால் ? – இது, நேற்று நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தில், நீதிபதி எழுப்பிய கேள்வி. கவிஞர் ஐயா , உங்கள் கவிதை, அந்த கேள்விக்கான பதிலோ..? என தோன்றுகிறது.</p>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#cf2e2e" class="td_text_highlight_marker">டெமாகோகு:</span></strong></h1>
<p>இந்த மாதிரி மனித பொறாமையின் உச்ச காலங்களில், எம்.எஸ் விசுவநாதன் கடவுளாக தெரிகிறார். அவரின் படைப்புகள் அனைவருக்கும் சொந்தம்! நோட்டிசுகள் பறக்காது, வழக்குகள் நடக்காது. இசை மட்டும் மகிழ்வித்துக்கொண்டே இருக்கும்.</p>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#cf2e2e" class="td_text_highlight_marker">கந்தர்வன்:</span></strong></h1>
<p>“சுயமென்று ஏதுமில்லை; எல்லாம் கூட்டியக்கம்” இந்த எதார்த்த உண்மை புரிந்து விட்டால் எவரும் ‘ஞானி’யே.</p>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#cf2e2e" class="td_text_highlight_marker">குளித்தலை மனோ:</span></strong></h1>
<p>நீதிபதி ஆணவத் தலையில் வைக்கும் கொட்டும் கூட ஒரு இசைதான் விடும் அறை கூட ஒரு இசை வடிவம்தான் இசை நம்மை சுற்றி இருக்கிற சப்தங்கள் அதை எவன் தனக்கே உரிமை கொண்டாடுவது ? வான் மழை மண்ணிலும் கடலிலும் ஜலதரங்கம் வாசிக்கிறது அதில் எந்த துளி உன்னுடையது?</p>
<p>The post <a href="https://wowtam.com/5-is-vairamuthus-advice-for-ilayaraja/25783/">வைரமுத்து கொடுக்கும் அட்வைஸ் இளையராஜாவுக்கா?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/5-is-vairamuthus-advice-for-ilayaraja/25783/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>3.99 கோடி ரூபாய் இறைவன் செய்த குற்றம்! – நயினார் நாகேந்திரன்</title>
<link>https://wowtam.com/2-3-99-crore-rupees-crime-committed-by-the-lord-nayanar-nagendran/25781/</link>
<comments>https://wowtam.com/2-3-99-crore-rupees-crime-committed-by-the-lord-nayanar-nagendran/25781/#respond</comments>
<dc:creator><![CDATA[பி.எம். சுதிர்]]></dc:creator>
<pubDate>Thu, 25 Apr 2024 10:37:30 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் அரசியல்]]></category>
<category><![CDATA[அதிமுக]]></category>
<category><![CDATA[காவல் துறை]]></category>
<category><![CDATA[சென்னை பசுமை வழிச்சாலை]]></category>
<category><![CDATA[தாம்பரம் போலீஸார் சம்மன்]]></category>
<category><![CDATA[திமுக]]></category>
<category><![CDATA[தேர்தல் பறக்கும் படை]]></category>
<category><![CDATA[நயினார் நாகேந்திரன்]]></category>
<category><![CDATA[போலீஸ் விசாரணை]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25781</guid>
<description><![CDATA[<p>மே 2-ம் தேதியோ அல்லது அதர்கு முன்போ போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/2-3-99-crore-rupees-crime-committed-by-the-lord-nayanar-nagendran/25781/">3.99 கோடி ரூபாய் இறைவன் செய்த குற்றம்! – நயினார் நாகேந்திரன்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தேர்தல் பறக்கும் படையால் 3.99 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். பணத்துடன் பிடிபட்டவர்களை எனக்குத் தெரியும். ஆனால் பணம் என்னுடையது அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மே 2-ம் தேதியோ அல்லது அதர்கு முன்போ போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</mark></strong></h1>
<p>முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு , நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ரூ.3.99 கோடி கைப்பற்றப்பட்டது. தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.</p>
<p>இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.</p>
<p>இதுதொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், நயினார் நாகேந்திரன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார். இதனை அடுத்து 2-வது முறையாக இன்று அவருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. மே 2-ம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பாக சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது:</p>
<p>தமிழ்நாட்டில் பறக்கும்படையால் இதுவரை 200 கோடிக்கு மேல் கைப்பற்றியிருக்கிறார்கள். இதில் ரூ.4 கோடி யாரோ என் பெயரை சேர்ந்து கூறியதால் இதற்குமட்டும் தனி கவனம் செலுத்துக்கிறீர்கள்.</p>
<p>இத்தனைக்கும் தேர்தல் பிரசாரத்தின்போதே அது என் பணம் இல்லை. எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டேன். யாரோ என் பெயரைகூறுவதற்கு நான் பொறுப்பேற்கமுடியாதே… அதில் இருக்கும் மூன்று பேர் (பணத்துடன் சிக்கியவர்கள்) மட்டுமல்ல இன்னும் நிறையபேரை எனக்கு தெரியும். அதற்காக அவர்கள் கூறும் குற்றச்சாட்டை நான் ஏற்கமுடியாது. இதற்கு பின்னணியில் திமுக, அதிமுக இருக்குமா என கேட்கிறீர்கள். இருவர் மீதும் குற்றமில்லை… இறைவன் செய்த குற்றம். உட்கட்சியிலிருப்பவர்களே இதை செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.</p>
<p>நீங்களோ, நானோ நினைத்துப்பார்க்க முடியாத வகையில் பா.ஜ.க-வின் வளர்ச்சி வந்துகொண்டிருக்கிறது. இந்தப் பணம் தொடர்பாக காவல்துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தருவோம். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், காவல்துறை அடித்து மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருக்கலாம். இதற்காகவெல்லாம் அவதூறு வழக்கு தொடர்வது நேர விரையம்.</p>
<h1 class="wp-block-heading"><strong>காவல் துறையின் சம்மனுக்கு மே.2-ம் தேதியோ அல்லது அதர்கு முன்னதாகவோ ஆஜராகி அது தொடர்பாக விளக்கம் அளிப்பேன். விசாரணையின்போதுதான் கைதானவர்கள் என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள் என்பது தெரியவரும்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/2-3-99-crore-rupees-crime-committed-by-the-lord-nayanar-nagendran/25781/">3.99 கோடி ரூபாய் இறைவன் செய்த குற்றம்! – நயினார் நாகேந்திரன்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/2-3-99-crore-rupees-crime-committed-by-the-lord-nayanar-nagendran/25781/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>விசாரணைக்கு வாங்க! – IPL சர்ச்சையில் தமன்னா</title>
<link>https://wowtam.com/1-buy-for-trial-tamannaah-in-ipl-controversy/25770/</link>
<comments>https://wowtam.com/1-buy-for-trial-tamannaah-in-ipl-controversy/25770/#respond</comments>
<dc:creator><![CDATA[இரா. ரவிஷங்கர்]]></dc:creator>
<pubDate>Thu, 25 Apr 2024 10:28:56 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் சினிமா]]></category>
<category><![CDATA[IPL சர்ச்சை]]></category>
<category><![CDATA[ஃபேர்ப்ளே]]></category>
<category><![CDATA[இந்தியா]]></category>
<category><![CDATA[ஐபிஎல் போட்டி]]></category>
<category><![CDATA[கோட்]]></category>
<category><![CDATA[க்ரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்]]></category>
<category><![CDATA[சம்மன்]]></category>
<category><![CDATA[சினிமா]]></category>
<category><![CDATA[சைபர் செல்]]></category>
<category><![CDATA[தமன்னா]]></category>
<category><![CDATA[பெட்டிங் செயலி]]></category>
<category><![CDATA[விஜய்]]></category>
<category><![CDATA[வெங்கட் பிரபு]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25770</guid>
<description><![CDATA[<p>அந்த செயலியின் விளம்பரங்களில் நடித்த தமன்னா, சஞ்சய் தத் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்ட்ரா சைபர் செல். </p>
<p>The post <a href="https://wowtam.com/1-buy-for-trial-tamannaah-in-ipl-controversy/25770/">விசாரணைக்கு வாங்க! – IPL சர்ச்சையில் தமன்னா</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தமன்னா, சினிமாவில் நடிக்க வந்து ஏறக்குறைய 20 வருடங்களாகிவிட்டன. ஆனால் இதுவரையில் அவர் எந்த சர்ச்சையிலும் சிக்கியது இல்லை.</mark></strong></h1>
<p>ஆனால் இப்போது அவருக்கு மகாராஷ்ட்ரா சைபர் செல் சம்மன் அனுப்பி இருக்கிறது. நீங்கள் எங்கே இருந்தாலும், வருகிற ஏப்ரல் 29-ம் தேதி நேரில் வந்து ஆஜராக வேண்டுமென மகராஷ்ட்ரா சைபர் செல் கூறியிருக்கிறது.</p>
<p>தமன்னா அப்படி என்ன செய்துவிட்டார்?</p>
<p>இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஃபேர்ப்ளே என்னும் பெட்டிங் செயலியில் சட்டவிரோதமாக ஒளிப்பரப்பினார்கள். இது நடந்தது 2023-ல். இந்த ஃபேர்ப்ளே செயலியானது மஹாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை நிறுவன செயலி ஆகும். இப்படி ஐபிஎல் போட்டிகளை ஃபேர்ப்ளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிப்பரப்பியதால், ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றிருக்கும் வியாகாம் நிறுவனத்திற்கு எக்கச்சக்கமான இழப்பு என்பதால், அந்நிறுவனம் புகார் செய்திருக்கிறது.</p>
<p>பெட்டிங் செயலியில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்பியதால், அந்த செயலியின் விளம்பரங்களில் நடித்த தமன்னா, சஞ்சய் தத் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்ட்ரா சைபர் செல். இப்படி ஃபேர்ப்ளே செயலியில்</p>
<p>வருகிற ஏப்ரல் 29-ம் தேதி தமன்னா விசாரணைக்கு வந்தப்பிறகு தான் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும். தற்போது வெளிநாட்டில் இருப்பதால் தன்னால் உடனடியாக விசாரணைக்கு வரமுடியாது என்று சஞ்சய் தத் கால அவகாசம் கேட்டிருக்கிறார்.</p>
<h1 class="wp-block-heading"><strong>பணத்திற்காக விளம்பரங்களில் நடிப்பது என்பது வழக்கம்தான். ஆனால் இப்போது சட்டவிரோதமான செயல்களில் விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் இறங்குவதால், விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்க விரும்பும் பிரபலங்கள் அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையைத் தெரிந்து கொண்ட பின்பே நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழ ஆரம்பித்திருக்கிறது</strong>.</h1>
<hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-pale-cyan-blue-color">தலையில் அடி வாங்கிய விஜய்</mark></strong></h1>
<p>விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘க்ரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்றது. இங்கு ஆக்ஷன் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இந்த ஷுட்டிங்கை முடித்துவிட்டுதான் விஜய் இங்க தேர்தலில் வாக்களிக்க வந்தார். தேர்தலுக்குப் பிறகு இப்போது சென்னை ஷூட்டிங் நடந்து வருகிறது.</p>
<p>விஜய் வாக்களிக்க வந்த போது அவர் நடந்த விதமும், தோற்றமும் சமூக ஊடகங்களில் விவாத பொருளாகின.</p>
<p>இதற்கு பின்னணியில் ஒரு பெரும் விபத்து இருப்பதாக கூறுகிறார்கள்.</p>
<p>ரஷ்யாவில் ஆக்ஷன் தொடர்பான காட்சிகளை எடுக்கும் போது, டூப் போட்டு எடுக்கலாம் என வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். ஆனால் விஜய் அந்த யோசனையை மறுத்துவிட்டாராம். டூப் போடாமால் நானே நடிக்கிறேன் என விஜய் அடம்பிடிக்க, வேறுவழியில்லாமல் விஜயை வைத்தே சண்டைக்காட்சிகளை ஷூட் செய்திருக்கிறார்கள்.</p>
<p>அப்போது நடந்த சிறு விபத்தில் விஜய்க்கு அடிப்பட்டு இருக்கிறது. தலையில் அடிப்பட்டதோடு, கை, கால்களிலும் சின்ன சின்ன சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. இதனால் பதறிப்போன கோட் குழு விஜயை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். அங்கு தேவையான முதலுதவியை எடுத்து கொண்டு விஜய் சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார் என்கிறார்கள்.</p>
<p>இதனால்தான் வலியின் காரணமாக தனது தலையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் வாக்களிக்க விஜய் வந்தார் என கூறுகிறார்கள்.</p>
<h1 class="wp-block-heading"><strong>கோட் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கால்ஷீட் பிரச்சினை வந்துவிட்டால், பிறகு குறிப்பிட்ட தேதியில் முடிக்க முடியாமல் போயிவிடும் என்பதால், விஜய் வேறுவழியில்லாமல் ஒய்வெடுக்காமலேயே நடிக்க வந்துவிட்டார் என்கிறது கோட் படக்குழு.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/1-buy-for-trial-tamannaah-in-ipl-controversy/25770/">விசாரணைக்கு வாங்க! – IPL சர்ச்சையில் தமன்னா</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/1-buy-for-trial-tamannaah-in-ipl-controversy/25770/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>பெண்களுக்கு ஜன்னல்தான் பிடிக்கிறது – ஒரு ஊர் சுற்றி ஆய்வு!</title>
<link>https://wowtam.com/4-women-love-the-window-a-survey-around-town/25773/</link>
<comments>https://wowtam.com/4-women-love-the-window-a-survey-around-town/25773/#respond</comments>
<dc:creator><![CDATA[பி.எம். சுதிர்]]></dc:creator>
<pubDate>Thu, 25 Apr 2024 10:06:05 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் டூர்]]></category>
<category><![CDATA[இந்தியர்கள்]]></category>
<category><![CDATA[இந்தியா]]></category>
<category><![CDATA[உஜ்ஜயினி]]></category>
<category><![CDATA[ஊர் சுற்றி ஆய்வு]]></category>
<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
<category><![CDATA[சுற்றுலா]]></category>
<category><![CDATA[ஜிம் கார்பெட் தேசிய பூங்கா]]></category>
<category><![CDATA[டொரண்டோ]]></category>
<category><![CDATA[துபாய்]]></category>
<category><![CDATA[நியூயார்க்]]></category>
<category><![CDATA[பத்ரிநாத்]]></category>
<category><![CDATA[பயணம்]]></category>
<category><![CDATA[பாங்காக்]]></category>
<category><![CDATA[மேக் மை டிரிப் நிறுவனம்]]></category>
<category><![CDATA[லண்டன்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=25773</guid>
<description><![CDATA[<p>இந்தியாவைச் சேர்ந்த சுமார் 10 கோடி பயணிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தெரியவந்துள்ள சில முக்கிய விஷயங்கள்…</p>
<p>The post <a href="https://wowtam.com/4-women-love-the-window-a-survey-around-town/25773/">பெண்களுக்கு ஜன்னல்தான் பிடிக்கிறது – ஒரு ஊர் சுற்றி ஆய்வு!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">இந்தியர்களின் சுற்றுலா மற்றும் பயணங்களைப் பற்றி மேக் மை டிரிப் நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 10 கோடி பயணிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தெரியவந்துள்ள சில முக்கிய விஷயங்கள்…</mark></strong></h1>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#00d084" class="td_text_highlight_marker">ஆண்டுக்கு 3 பயணம்:</span></strong></h1>
<p>இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஆண்டுக்கு 3 முறையாவது ஏதாவது ஒரு இடத்துக்கு பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் இந்தியர்களின் பயணம் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.</p>
<p>வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்லும் பெருவாரியான வட மாநில மக்களின் தேர்வாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை வார இறுதியில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் முக்கிய தேர்வாக ஊட்டி மற்றும் மூணாறு பகுதிகள் உள்ளன.</p>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#00d084" class="td_text_highlight_marker">அதிகரிக்கும் ஆன்மிக பயணங்கள்:</span></strong></h1>
<p>ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது அயோத்திக்கான பயணத் தேடல்களின் எண்ணிக்கை 585 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அயோத்திக்கு அடுத்ததாக 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் உஜ்ஜயினி நகரத்தை 359 சதவீதம் பேரும், பத்ரிநாத்தை 343 சதவீதம் பேரும் அதிகமாக இணையதளத்தில் தேடி இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.</p>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#00d084" class="td_text_highlight_marker">சர்வதேச சுற்றுலா:</span></strong></h1>
<p>சர்வதேச சுற்றுலா செல்லும் இந்திய பயணிகளின் முதல் தேர்வாக துபாய், பாங்காக், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் இருக்கின்றன. வெளிநாடு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளில் சுமார் 30 சதவீதம் பேர் இந்த நகரங்ளுக்கு சுற்றுலா மேற்கொள்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் லண்டன், டொரண்டோ மற்றும் நியூயார்க் நகரங்கள் இருக்கின்றன. </p>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#00d084" class="td_text_highlight_marker">ஜன்னலோர இருக்கையை விரும்பும் பெண்கள்:</span></strong></h1>
<p>பேருந்து மற்றும் ரயில் பயணங்களின்போது பெண்கள் அதிகமாக ஜன்னலோர இருக்கையை விரும்புவதாகவும், ஆண்கள் ஜன்னலில் இருந்து தள்ளியுள்ள இருக்கையை விரும்புவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் இந்தியாவுக்குள் பயணம் செய்யும்போது சுமார் 1 வாரத்துக்கு முன்பே ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்வதாகவும், வெளிநாடுகளுக்கு செல்லும்போது 1 மாதத்துக்கு முன்பே ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்வதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.</p>
<h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#00d084" class="td_text_highlight_marker">விமானப் பயணம்:</span></strong></h1>
<p>இந்தியாவுக்குள் விமானப் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் காலை 9 மணிமுதல் 6 மணிக்குள்ளாக செல்லும் விமானங்களையே பயணிகள் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். விமானங்களில் அசைவ உணவுகளைவிட சைவ உணவுக்கே அதிக மவுசு இருக்கிறது. குறிப்பாக சீஸ், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை வைத்து செய்யும் பிரட் சாண்ட்விச்சை அதிகமானோர் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.</p>
<p>The post <a href="https://wowtam.com/4-women-love-the-window-a-survey-around-town/25773/">பெண்களுக்கு ஜன்னல்தான் பிடிக்கிறது – ஒரு ஊர் சுற்றி ஆய்வு!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/4-women-love-the-window-a-survey-around-town/25773/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
</channel>
</rss>
If you would like to create a banner that links to this page (i.e. this validation result), do the following:
Download the "valid RSS" banner.
Upload the image to your own server. (This step is important. Please do not link directly to the image on this server.)
Add this HTML to your page (change the image src
attribute if necessary):
If you would like to create a text link instead, here is the URL you can use:
http://www.feedvalidator.org/check.cgi?url=https%3A//wowtam.com/feed/